திருவண்ணாமலையில் இளைஞர்களுக்கு வாலிபால் போட்டி

திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளைஞர்களிடையே வாலிபால் போட்டி நடைபெற்றது.

Update: 2024-04-08 06:02 GMT

வாலிபால் போட்டி

திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளைஞர்களிடையே வாலிபால் போட்டி நடைபெற்றது. போட்டியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.மேலும் இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Tags:    

Similar News