தருமபுரியில் ஆதரவற்றை உடலை நல்லடக்கம் செய்த தன்னார்வ அமைப்பினர்

தர்மபுரி அரசு மருத்துவமனை அருகில் மை தருமபுரி அமைப்பின் சார்பில் ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்தனர்.

Update: 2024-06-07 11:46 GMT

அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் விபத்தில் அடிபட்டுள்ளார். இவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இருந்தவரை பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை.

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இவரது உடலை பாலக்கோடு காவல் நிலைய காவலர் ஆனந்த்பாபு, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, பாப்பாரப்பட்டி அருணாசலம் ஆகியோர் ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News