வாக்காளர் அட்டை சரிபார்ப்பு பணி - மாநகராட்சி ஆணையர் ஆய்வு.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-01-04 05:04 GMT

ஆணையர் ஆய்வு 

இந்தியா முழுவதும் விரைவில் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலத்திற்குட்பட்ட 34 - வது வார்டு பாளையக்காடு பகுதியில் உள்ள வீடுகளில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வாக்காளர் அடையாள அட்டை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News