தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

சங்ககிரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-01-25 17:03 GMT

பேரணி 

சேலம் மாவட்டம், சங்ககிரியில் தேசிய வாக்காளர் தினத்தினையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தேர்தலில் வாக்களிப்பது மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சங்ககிரி அருகே உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி பழைய, புதிய எடப்பாடிசாலைகள், பழைய பேருந்து நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை அடைந்து . பேரணியில் மாணவிகள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் மகேந்திரன், சங்ககிரி வருவாய் ஆய்வாளர்கள் கீதா, கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News