வாக்காளர் தினம் - கௌரவிக்கப்பட்ட மூத்த வாக்காளர்கள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

Update: 2024-01-26 04:55 GMT

சால்வை அணிவித்து கௌரவித்தல் 

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வேலூர் கோட்டை எதிரில் உள்ள நகர அரங்கில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்து வாக்காளர் தினம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய பகுதிகளில் சென்று இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குகள் விற்பனைக்கு அல்ல, வாக்களிப்பது நமது கடமை, எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்பது நமது கடமை, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
Tags:    

Similar News