வாக்குச்சீட்டு எந்திரத்தில் மோசடி: விசிக ஆர்ப்பாட்டம்

வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யும் பாஜக அரசை கண்டித்து திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-23 15:19 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யும் பாஜக அரசை கண்டித்தும், இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், வாக்குச்சீட்டு முறையினை மீண்டும் நடைமுறை படுத்த வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி சிந்தாமணி, அண்ணா சாலை அருகே மாவட்ட செயலாளர்கள் கனியமுதன்,

புல்லட்லாரன்ஸ், கலைச்செல்வன், குருஅன்புச்செல்வன், சக்திஆற்றலரசு ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, திருச்சி,கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி மண்டல துணைச் செயலாளர் பொன்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் புதுவை பாவாணன் கண்டன உரை வழங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநிலத் துணைச் செயலாளர் அரசு, மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, மற்றும் நிர்வாகிகள் கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

Tags:    

Similar News