அணைகளில் இன்று நீர் திறப்பு-ஆட்சியர் எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-28 04:44 GMT

நீர் திறப்பு 

கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு,பாபநாசம் சேர்வலாறு நீர் தேக்கத்திலிருந்து  நீர் திறப்பு இன்று 2000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. இது படிப்படியாக 5000 கன அடியாக இன்று மாலைக்குள் அதிகரிக்கப்படும்‌.மழை மற்றும் நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News