மானாமதுரை, திருப்புனம் பாசனத்திற்காக வைகையிலிருந்து தண்ணீர் திறப்பு

மானாமதுரை, திருப்புனம் பாசனத்திற்காக வைகையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-12-01 13:34 GMT

மானாமதுரை, திருப்புனம் பாசனத்திற்காக வைகையிலிருந்து தண்ணீர் திறப்பு  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை மாவட்டம், விரகனூா் மதகு அணையிலிருந்து பாா்த்திபனூா் மதகு அணை வரை உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களைச் சேர்ந்த வலது, இடது பிரதானக் கால்வாய்களில் வைகை ஆற்றில் வரும் தண்ணீா் இன்று திறந்து விடப்பட்டது. மேலும் தற்போது, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் விதைப்பு, நடவு முறைகளில் நெல் நாற்றுகள் பயிரிடப்பட்டு வளா்ந்து வருகின்றன. ஆற்றில் வரும் தண்ணீரால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

Similar News