எங்களுக்கு மரியாதை இல்லை! பாதியில் கிளம்பிய தே.மு.தி.க.,

நீலகிரியில் அதிமுகவினர் தங்களை மதிக்கவில்லை என கொடியை தூக்கிக்கொண்டு கிளம்பிய தே.மு.தி.க., தொண்டர்கள்.

Update: 2024-04-01 14:32 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்கா அருகே இன்று மதியம் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளான எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினர் ஆதரவளிக்க இந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., வினர் மதிப்பளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தே.மு.தி.க., வினர் பிரசார கூட்டத்தை புறக்கணித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொடிகளை தூக்கிக்கொண்டு வெளியேறினர்.
Tags:    

Similar News