பூரண மதுவிலக்கை வலியுறுத்துவோம் : செல்வப் பெருந்தகை பேட்டி!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்துவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

Update: 2024-07-16 07:10 GMT

செல்வப் பெருந்தகை

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "பெருந்தலைவரின் பிறந்தநாள், தமிழ்நாட்டின் பிறந்தநாள். தமிழக மக்களின் தலைவரின் பிறந்த நாள். காமராஜர் ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று காமராஜரை கொலை செய்ய முயற்சித்தவர்களும் அவரது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். எல்லோரும் அவரின் பிறந்த நாளை கொண்டாடலாம். ஆனால் அவரை காங்கிரஸ் மட்டும் தான் சொந்தம் கொண்டாட முடியும். தமிழ்நாட்டு உரிமைகளை கர்நாடகா கொடுக்க மறுக்கிறது என்றால் மத்திய அரசு இதை வேடிக்கை பார்க்க கூடாது. பிரதமர் மோடி தலையிட்டு அவர்களுக்கு உரிய தண்ணீரை கொடுங்கள் என்று பெற்றுத் தர வேண்டும். எங்களது நாடி நரம்பில் அனைத்திலும் ஊறி இருப்பது தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பது தான். ஆம்ஸ்ட்ராங் மற்றும் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில்தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது. புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயக்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி புலன் விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸின் கொள்கை, மகாத்மா காந்தியின் கொள்கை பூரண மதுவிலக்கு. பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்துவோம் என்றார்.
Tags:    

Similar News