வேட்பாளர் யாராக இருந்தாலும் வெற்றி பெற வைப்போம் - அமைச்சர் மூர்த்தி

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மதுரை தொகுதிக்கு முதல்வர் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்வோம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Update: 2024-01-26 08:31 GMT

அமைச்சர் மூர்த்தி 

மதுரை மாவட்டம் மேலூரில் மதுரை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டம் மேலூர் நகர்மன்ற தலைவர் முகமதுயாசின் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கான பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. சேலத்தில் நடந்து முடிந்த இளைஞர் அணி மாநாடில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர் என்பது நாடறிந்த உண்மை. அவர்கள் கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில், அதற்கு நாம் தயாராகி வருகின்றோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 தொகுதியிலும் வெற்றிப் பெறுவோம். அதேபோல் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு முதல்வர் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்று அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்நிகழ்ச்சியில், தலைமை கழக பேச்சாளர்கள் தூத்துக்குடி சரத்பாலா, ஈரோடு இளையகோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News