ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி

ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடந்தது.

Update: 2024-06-30 14:40 GMT

ஆயுதப்படை பயிற்சி 

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் வாரந்தோறும் காவலர்களுக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி நடைபெறும். அதன்படி மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சிக்கு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடகிருஷ்ணன், சீராளன், சந்திரலேகா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் கவாத்து பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
Tags:    

Similar News