சிவகாசி அருகே பிஎஸ்ஆர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா...

சிவகாசி அருகே பிஎஸ்ஆர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.

Update: 2024-07-08 09:19 GMT

 மாணவர் வரவேற்பு விழா

சிவகாசி அருகே பிஎஸ்ஆர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா... விருதுநகர் மாவட்டம், சிவகாசி பி.எஸ்.ஆர் கலை மற்றம் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. பி.எஸ்.ஆர் கல்விக் குழுமத்தின் கல்விசார் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் மற்றும் சிறப்பு விருந்தினர் இரகுநாத் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.பி.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் கோபால்சாமி வரவேற்புரை ஆற்றினார். கல்லுரியின் முதல்வர் மகேஸ்வரி தொடக்க உரை ஆற்றினார்.பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்துறை வழங்கினார்.பி.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறைத் தலைவர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.சிறப்பு விருந்தினராக மனோ தத்துவ நிபுணர் இரகுநாத் மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தையும் பெற்றோர்களின் சூழலையும் அறிந்து அதற்கேற்றார்போல் மாணவர்கள் நடந்து கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி நல்லதொரு வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு ஏற்ற அறிவுரையினை உளவியல் சார்த்த கருந்துக்களோடு வழங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் தேவிகா நன்றி கூறினார்.
Tags:    

Similar News