காட்டுமைலூர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

காட்டுமைலூர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2024-06-27 06:27 GMT

காட்டுமைலூர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காட்டுமைலூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊராக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் மொத்தம் 233 பயனாளிகளுக்கு 39, 58, 388 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News