மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

சேலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்.

Update: 2024-06-25 07:27 GMT

சேலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்.


சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். அவர்களிடம் கலெக்டர் பிருந்தாதேவி மனுக்களை பெற்றுக்கொண்டு அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 495 மனுக்கள் வரப்பெற்றன. இதனை தொடர்ந்து தரைதளத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் பிருந்தாதேவி குறைகளை கேட்டு அவர்களிடம் மனுக்களை வாங்கினார்.

அப்போது, வீட்டுமனைப்பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 32 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தினார். மேலும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார். அப்போது அவர் பொதுமக்களின் மனுக்கள் மீது முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News