சேலத்தில் 3,708 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

சேலத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.19.49 கோடி மதிப்பில் 3,197 பேருக்கு வீட்டுமனை பட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

Update: 2024-03-13 02:51 GMT

வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி 

சேலம் சோனா தொழில்நுட்பக்கல்லூரியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ.19 கோடியே 49 லட்சம் மதிப்பில் சேலம், மேட்டூர், சங்ககிரி மற்றும் ஆத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட 3,197 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
Tags:    

Similar News