விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

Update: 2024-06-29 05:47 GMT
தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தென்காசியில் விவசாய குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, ஆகிய வேளாண் சார்ந்த துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கக்கூடிய நிவாரணம் மற்றும் மானியம் குறித்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News