நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
Update: 2024-06-27 16:34 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 76 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.