தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-02-17 01:41 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 1886 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 77 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News