தென்காசி அருகில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்;
Update: 2024-06-20 05:58 GMT
நலத்திட்ட உதவிகள்
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியுமான முருகேசனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் 100 மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.