மின்கம்பத்தின் மீது சூறைகாற்றால் சாய்ந்த மரம் !
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் நான்காவது வார்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
Update: 2024-06-01 11:50 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது சூறைக்காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த நிலையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்து விபத்துக்குள்ளாகி சீரமைக்கப்படியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது வார்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் சாய்ந்த மரங்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு நகர மன்ற உறுப்பினர் ஜோதி உடன் இருந்தார்.