போலி நகை கொடுத்து ஏமாற்றிய பெண் கைது

தியாகதுருகத்தில் போலி நகை கொடுத்து ஏமாற்றிய பெண் கைது.

Update: 2024-04-24 05:58 GMT

காவல்துறை விசாரணை


கள்ளக்குறிச்சி தியாகதுருகத்தில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றி பணத்தை வாங்கிக் கொண்டு தப்ப முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகத்தை சேர்ந்தவர் சம்பலால் மகன் கவுதம் சந்த், 52; சேலம் மெயின் ரோட்டில் அடகு கடை வைத்துள்ளார். கடந்த 22ம் தேதி முற்பகல் 11:00 மணிக்கு இவர் கடைக்கு வந்த பெண் ஒருவர் தான் வைத்திருந்த 2 வளையல்களை தங்க நகை என்று கூறி, பணம் கேட்டார். அதனை கவுதம் சந்த் முழுமையாக பரிசோதிக்காமல் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். பின், வளையலை பரிசோதித்த போது அது போலி என, தெரியவந்தது. உடனடியாக அப் பெண்ணை தேடிய போது பக்கத்துக் கடையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். விசாரணையில், சேலம் ஜங்ஷனை சேர்ந்த சக்திவேல் மனைவி சரண்யா, 30, என, தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News