சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

பெரிய ரங்கபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-07-01 05:15 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ரங்கபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஜூன் 29ஆம் தேதி மதியம் 12:00 மணி அளவில் பெரிய ரங்கபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி திலகவதி வயது 52 என்பவர் அவரது வீட்டின் அருகாமையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, திலகவதியை கைது செய்து,அவர் விற்பனைக்கு வைத்திருந்த 9- குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர், அவரை காவல் நிலையப் பணியில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News