நாகையில் சாராயம் விற்ற பெண் கைது

நாகையில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டு, 750 மில்லி அளவுள்ள 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ,

Update: 2024-05-20 13:37 GMT

நாகையில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டு, 750 மில்லி அளவுள்ள 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ,


நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 20.05.2024 தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் நாகை வெளிப்பாளையம் கணேடன் மனைவி ஈஸ்வரி . என்ற நபரை கைது செய்தும் அவர்களிடமிருந்து 750 மில்லி அளவுள்ள 50 பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ,
Tags:    

Similar News