திருப்பத்தூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-06-27 11:11 GMT

கோப்பு படம் 

திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி புனிதா வயது 30 இவர்களுக்குள் அடிக்கடிகுடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன் மனைவிக்குள் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பாடுவே புனிதா வீட்டில் வைத்திருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கி கீழே விழுந்தார்.

அப்பொழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் புனிதாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதை குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News