நல்லூர் அருகே திருமணம் ஆன 7 மாதத்தில் பெண் தற்கொலை.

பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் அருகே திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்தி ஆ.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றார்

Update: 2024-06-30 17:43 GMT

தற்கொலை 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி(52). கூலித் தொழிலாளி.இவரது மகள் ஆர்த்தி (28) இவர் எம்.எஸ்.சி., பி.எட். முடித்துவிட்டு வெப்படை அருகே உள்ள எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி  ஆபரேட்டராக தொகுப்பு  ஊதியம் அடிப்படையில்  கடந்த 5 ஆண்டுகளாக  வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆர்த்திக்கு கடந்த 19.11.2023-ந் தேதி  திருமலைபட்டி கெத்துக்காடு பகுதியை சேர்ந்த சீரங்கன் மகன் கார்த்திகேயன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆர்த்திக்கு திருமணமாகி கடந்த 3 மாதமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆர்த்தி தனது கணவர் வீட்டில் இருந்து தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இரவு அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். ஆர்த்தி அங்கிருந்த கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இரவு சுமார் 1 மணி அளவில் ஆர்த்தியின் தந்தை பார்த்த போது ஆர்த்தியை காணவில்லை. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மற்றொரு அறையில் சேலையால் தூக்கிட்டு தொங்கியது தெரிய வந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கந்தசாமி தனது மனைவி மற்றும் மகனை தட்டி எழுப்பி ஆர்த்தியை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கந்தசாமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆர்த்திக்கு திருமணம் ஆகி சுமார் 7 மாதங்களே ஆவதால், இவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News