இளம்பெண் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-07-01 06:39 GMT
தற்கொலை
ஆலங்குடி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் மணிரத்தினம். இவரது மனைவி ஸ்ரீநிரஞ்சியாகாவேரி(20). இவர்களுக்கு சாய்ஹரி (4) என்ற மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்ரீநிரஞ்சியாகாவேரி சம்பவத்தன்று மின் விசிறியில் சேலையால் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதையறிந்த அவரது பெற்றோர் தங்களது மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டதாக ஆலங்குடி போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீநிரஞ்சியாகாவேரிக்கு திருமணமாக 7 ஆண்டுகளே ஆவதால் புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா தனி விசாரணை நடத்தி வருகிறார்.