பெண் தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-05 15:57 GMT

தற்கொலை 

நாமக்கல் மாவட்டம்,  வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி,  எலந்தக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (26). இவரது மனைவி மலர்க்கொடி (21). இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு அவர்களது  பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெற்றோர்களுக்கு பயந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணமான நாள் முதல் மலர்க்கொடியின் பெற்றோர்கள் அவரிடம் பேசாமல் இருந்து வந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 9- ஆம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அவரது கணவர் நவீன் மனைவி மலர்கொடியை அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். மலர்க்கொடி வீட்டில் இருந்து வெகுநேரமாகியும் வெளியே வராததால் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை காப்பாற்றி  நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் மலர்க்கொடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேர்த்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News