தீக்குளித்து பெண் உயிரிழப்பு - காப்பாற்ற சென்ற கணவன் காயம்

விருதுநகர் அருகே சின்ன மூப்பன்பட்டியில் பெண் தீக்குளித்து உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-01-28 11:48 GMT
காவல் நிலையம்
விருதுநகர் அருகே சின்ன மூ ப்பன்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் குமரேசன் சந்தன தேவி தம்பதியினர் குமரேசன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பிரச்சனைகள் செய்து வந்ததால் அவரை மிரட்டுவதற்காக மனைவி மண்ணெண்ணெயை எடுத்து தனக்குத்தானே  ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை மது போதையில் இருந்த கணவர் குமரேசன் தடுக்க சென்றதாகவும் அப்பொழுது இருவருக்குமே தீப்பிடித்ததாகவும் இதை அடுத்து அருகில் இருப்பவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சந்தன தேவி உயிர் இழந்த நிலையில் காயத்துடன் குமரேசன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News