நாகர்கோவிலில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது பைக் மோதி பெண் உயிரிழப்பு

நாகர்கோவிலில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது பைக் மோதி பெண் உயிரிழந்தார்.

Update: 2024-03-31 10:47 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்டியன் மனைவி சகாய கில்டாராணி (49). இவர் சம்பவ தினம் தனது மகள் மிருனுரோஸ் (24) என்பவர் உடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆசாரிப்பள்ளம் சென்று விட்டு ராமன் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மகள் பைக்கை ஓட்ட கில்டா ராணி பின்னால் அமர்ந்திருந்தார்.      

 ஆனந்தன் பாலம் -  வடக்கு கோணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சுயம்பு (54) என்பவர் ஓட்டி வந்த பைக் மிருது ரோஸ், கில்டா ராணி ஸ்கூட்டர் மீது மோதியது, இது தாய் மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.      

 இதில் சிறிது நேரத்தில் சகாய கில்டாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் படுகாயத்துடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.     

நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த சுயம்பு மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சுயம்பு படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News