ஈரோட்டில் பெண் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை முற்றுகை

ஈரோட்டில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2024-01-28 15:32 GMT

மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செல்வம்-வளர்மதி தம்பதியினர். வளர்மதிக்கு கடந்த 23ம் தேதி காய்ச்சல் மற்றும் காது வலி காரணமாக ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு வளர்மதியின் கழுத்தில் துளையிட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

பிறகு வளர்மதி இறந்துவிட்டதாக சஞ்சயிடம் தெரிவித்துள்ளார்.மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக வளர்மதி உயிரிழந்திருப்பதாக குற்றம் சாட்டிய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் விஜயன்,வளர்மதியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

Tags:    

Similar News