சிங்கம்புணரியில் பெண் மின்சாரம் தாக்கி பலி - போலீசார் விசாரணை

சிங்கம்புணரியில் பெண் மின்சாரம் தாக்கி பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2024-07-03 14:49 GMT

சிங்கம்புணரியில் பெண் மின்சாரம் தாக்கி பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு வளவு செட்டி தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு ராஜேஸ்வரி (28) என்கிற மனைவியும், ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது. ராம்குமார் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் ஆக்டிங் டிரைவர் ஆக பணிக்கு சென்று இருந்த வேளையில் அவரது மனைவி தனது வீட்டில் இருந்த இரும்பு டேபிள் ஃபேன் ஸ்விட்ச் ஆன் செய்து பேனை தூக்கும்போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News