வேப்பனபள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை !

வேப்பனபள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-19 06:29 GMT

தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடத்தாரை கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா 32 இவருக்கு முருகேசன் என்பவர் திருமணமாகி இரண்டு குழந்தை உள்ள நிலையில் இவரது கணவர் உயிரிழந்து 2 ஆண்டுகள் ஆகி உள்ளது. இந்த நிலையில் இவர் கிராமத்தில் வசித்துக் கொண்டு வேப்பனப்பள்ளி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய நிலையில் திடீரென திவ்யா வீட்டிலியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக போலீஸ் தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற வேப்பனப்பள்ளி போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். திடிரென்று பெண் மர்மான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News