காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.;

Update: 2024-05-08 12:27 GMT
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

பைல் படம் 

  • whatsapp icon

தூத்துக்குடி அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் மனைவி பேச்சியம்மாள் (18). இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

பேச்சியம்மாள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பாராம். இதனை அவரது ஸ்ரீராம் கணவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

Similar News