காரிமங்கலம் அருகே இளம் பெண் மாயம்

அடிலம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-13 15:08 GMT

இளம்பெண் மாயம் 

தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அடுத்த அடிலம் ஊராட்சி சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், விவசாயி. இவரது 17 வயது மகள், காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்2 படித்து விட்டு, தர்மபுரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

நேற்று முன்தினம், பயிற்சி நிலையத் திற்கு சென்ற அவர், மீண் டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காரிமங்கலம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News