மாணவி மாயம் - போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மாணவி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-24 09:51 GMT

பெண் மாயம் 

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் மகள் கவிபாரதி 21; இவர், அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி கல்லுாரிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மஞ்சுநாதன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.
Tags:    

Similar News