ராமநாதபுரம: கணவரை மீட்டுத்தர கோரி கண்ணீர் விட்ட பெண்

திருவாடானை அருகே முள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் சென்ற மீன்பிடி கணவரை மீட்டு தர மாவட்ட ஆட்சியரிடம் மீனவரின் மனைவி மனு அளித்தார்.

Update: 2024-05-27 14:54 GMT

கண்ணீர் விட்ட பெண்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர்  சமயகாந்த் என்பவர் சவுதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் சுமார் 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 9.11.2023 கடைசியாக தன் மனைவி நந்தினியிடம் தொலைபேசியில் பேசும்போது. நான் சவுதி அரேபியாவின் காவல்துறையால் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு தமாம் கத்தீப் பகுதியில் உள்ள சிறையில் இருப்பதாக நண்பர்கள் மூலமும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் மூலமும் கூறியுள்ளார்.

மேலும் சிறையில் இருந்து என்னிடம் யாருடைய தொலைபேசியிலாவது பேசும்போது நான் எந்த குற்றமும் செய்யவில்லை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்தோம் என்று கூறி போதை பொருள் கடத்தியதாக என்னை சிறையில் அடைத்து விட்டனர் என்றார். சமயகாந்தின் மனைவி நந்தினி கணவரை மீட்டுத் தரும்படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் மனு கொடுத்தார்.

Tags:    

Similar News