கம்பத்தில் பெண் தற்கொலை முயற்சி
தேனி மாவட்டம், கம்பத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-05-27 09:52 GMT
தற்கொலை முயற்சி
தேனி மாவட்டம், கம்பம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீனா. இவர் ஈஸ்வரி என்பவரிடம் ஒரு லட்சமும், நந்தினி என்பவரிடம் இரண்டு லட்சமும் கடன் பெற்று மாதம் வட்டி தொகை வழங்கிய நிலையில் கடந்த ஆறு மாதமாக வட்டி பழங்காத நிலையில் இருவரும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இது குறித்து கம்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்