குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை

உளுந்துார்பேட்டை அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-30 08:40 GMT

பைல் படம் 

உளுந்துார்பேட்டை தாலுகா களத்துார் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி இன்பவள்ளி 23. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழ்செல்வன் அவ்வபோது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த செந்தமிழ்செல்வனுக்கும், இன்பவள்ளிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த இன்பவள்ளி வீட்டில் துப்பட்டாவால் துாக்குபோட்டுக்கொண்டார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இன்பவள்ளி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News