வாலாஜா: பெண் தூக்குப்போட்டு தற்கொலை!
ராணிப்பேட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-03-29 10:00 GMT
அரசு மருத்துவமனை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த பூண்டி கிராமம் நத்தம் கொல்லைத் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (43). இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.