தனக்குத்தானே உடலில் தீ வைத்த பெண் சாவு

கன்னியாகுமரி மாவட்டம்,சுசீந்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீவைத்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-29 03:35 GMT
பெண்சாவு

குமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே பறக்கை வணிகர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (55). தற்போது சவுத்ரிநகர் பகுதியில் வசித்து வருகிறார். கார் ஒர்க் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா (50) சற்று மன நலம் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த 19ஆம் தேதி பெயிண்ட் அடிக்கிய பயன்படுத்தும் டின்னரை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உறவினர்கள் உமாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தனர்.அவரது உடலில் 45 சதவீத தீக்காயம் இருந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News