மகளிர் தின விழாவையொட்டி மகளிர் குழுவினர் சார்பில் விளையாட்டு போட்டி

குமாரபாளையத்தில் மகளிர் தின விழாவையொட்டி மகளிர் குழுவினர் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

Update: 2024-03-06 09:22 GMT

விளையாட்டு போட்டிகள் 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சர்வதேச மகளிர் தினவிழா மார்ச் 8ல் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி குமாரபாளையம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள மகளிர் குழு பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இசை நாற்காலி, ஸ்பூன் மூலம் பாட்டிலில் நீர் நிரப்புதல், ஸ்பூனில் எலுமிச்சைக்கனியை வாயில் வைத்த படி ஓடுதல், கோகோ, கட்டம் தாண்டுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வாகை சூடி, புவிதம், சிங்கப்பெண்ணே , புத்தர் தெரு மகளிர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மகாலட்சுமி, நாராயணி செய்திருந்தனர்.

Tags:    

Similar News