பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் கருத்தரங்கம் - தமிழிசை பங்கேற்பு

புளியம்பட்டியில் நடந்த பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் கருத்தரங்கில் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார்.

Update: 2024-01-08 06:59 GMT

கருத்தரங்கு

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி ரோட்டரி சார்பில் பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் கருத்தரங்கம் புளியம்பட்டியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் , மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டார்கள். நடைபெற்ற கருத்தரங்கில் பெண்களுக்கான முன்னுரிமைகள், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எவ்வாறு, சமூகத்தில் பெண்களின் பங்களிப்புகள், பெண்களுக்கான கல்வி, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான சம வாய்ப்பு, பழங்காலத்தில் சாதனை புரிந்த பெண்களின் பங்களிப்பனை பட்டியலிட்டது, சமூகத்தில் பெண்கள் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தைரியமாக இருத்தல், பெண்களின் முன்னேற்றத்திற்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
Tags:    

Similar News