மகளிர் தையல் தொழில் மேம்பாட்டு கூட்டுறவு சங்க கூட்டம் !

பெரம்பலூர் மாவட்ட மகளிர் தையல் தொழில் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது.

Update: 2024-07-05 04:28 GMT

மகளிர் 

பெரம்பலூர் மாவட்ட மகளிர் தையல் தொழில் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தொழில் கூட்டுறவு அலுவலர் (பொறுப்பு) பிச்சை பிள்ளை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சமூகநல அலுவலர்கள் ஜெயஸ்ரீ (பெரம்பலூர்), அனுராபூ நடராஜமணி (அரியலூர்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பெரம்ப லூர் மாவட்ட மகளிர் தையல் தொழில் மேம்பாட்டு கூட்டு றவு சங்கத்தில் இருந்து அரியலூரை தனியாக பிரிக்க கூடாது பள்ளி சீருடைகளை தைக்க தையல் கூலியை உயர்த்தி அறி விப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரம்பலூ அரியலூர் மாவட்டங்களில் இருந்து சங்கத்தை சேர்ந்த உறுட் பினர்களான மகளிர் தையல் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News