விரைவில் வேலைநிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர்கள்

ஈரோடு மாவட்ட போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக அறிவித்துள்ளார்.

Update: 2024-01-02 16:11 GMT

கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர் 

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வினை தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 2 வருடத்திற்கு மேலாகியும் நடத்தி முடிக்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும், ஊதிய உயர்வினை உடனே நடத்தி முடிக்கவும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் DA உயர்வினையும்,

மற்றும் பணப் பலன்களையும் உடனே வழங்கிட வேண்டியும் தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைக்க, காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலதாமதமின்றி உடனடியாக நிரப்பிட அரசை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வாயிற்கூட்டம், மற்றும் வேலை நிறுத்த அறிவிப்பு விளக்க கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு சென்னிமலை சாலையிலுள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அண்ணா தொழிற்சங்க மண்ணல செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் செங்கோட்டையன் , கே.வீ.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால் விரைவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News