தொழிலாளிக்கு 2- பெண் குழந்தை: விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை

ஜெகதாபியில் ஏழை தொழிலாளிக்கு 2- பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-06 12:27 GMT

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெகதாபி,கிழக்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி வயது 38. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள தமக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால், எதிர்காலத்தில் என்ன செய்வது என்ற வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் விரத்தி அடைந்த மன நிலையில் வாழ்ந்து வந்த பழனிசாமி, ஜூன் 5-ம் தேதி காலை 7:30- மணியளவில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி நிர்மலா (வயது 35) அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தனது கணவனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு பழனிச்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், சம்பவம் தொடர்பாக நிர்மலா காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News