பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

பெரும்பாறை அருகே உள்ள மீனாட்சி ஊத்து பகுதியில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-01-23 12:01 GMT
பெரும்பாறை அருகே உள்ள மீனாட்சி ஊத்து பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் வயது 39 அதே ஊரைச் சேர்ந்தவர் கனகசபாபதி மனைவி ஷீலா வயது 34. கூலித் தொழிலாளிகள். அருகருகே வசித்து வரும் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி நேற்று இரவு இவர்களுக்கிடையே தகராறு இதில் ஆத்திரமடைந்த சந்திரகுமார் சீலாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாண்டிக்குடி காவல் நிலையத்தில் இரண்டு பேரும் தனித்தனியாக செவ்வாய்க்கிழமையான இன்று காலை 11 மணியளவில் புகார் அளித்தனர். அதன் பேரில் சீலா சந்திரகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இதில் சந்திரகுமார் கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News