ஏற்காட்டில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை !
ஏற்காட்டில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 05:53 GMT
தற்கொலை
சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் பசுபதி சர்மா (வயது 52). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் முதுகில் அவருக்கு அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த பசுபதி சர்மா நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பசுபதி சர்மா இறந்து விட்டார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.