ரயில் மோதி தொழிலாளி பலி!

வாலாஜா அருகே ரயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-11 10:24 GMT

தற்கொலை

ராணிப்பேட்டை டவுன் பெல் குடியிருப்பை சேர்ந்தவர் தொழிலாளி செங்கதிர் (வயது 38). இவர் அதிகாலை வாலாஜா- முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து செங்கதிர் எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு இறந்து போனாரா? அல்லது ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News