சேலத்தில் தொழிலாளி மர்ம சாவு !
சேலத்தில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-13 07:25 GMT
பலி
சேலம் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 57). மர அறுவைமில் தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருப்பதினால் மனைவி கோபித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ரவி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக ரவியை காணாத நிலையில், அக்கம் பக்கத்தினர் இவரது வீட்டை திறந்து பார்த்தபோது கண் அருகே காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.